தமிழகத்தில் கபீர் புரஸ்கார் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் சமுதாய நல்லிணக்கத்திற்காக போராடும் அல்லது சமூக நலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவோர்களுக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள்:
தமிழகத்தில் அரசு மத மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை தான் வலியுறுத்துகிறது. இதற்காக பல்வேறு அறிவிப்புகளையும், விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இது போன்ற சமூக நல்லிணக்கத்தை விரும்பும் செயல்பாட்டு வீரர்களுக்கு மரியாதையை செய்யும் விதமாக கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படும். தமிழகத்தில் காவல், தீயணைப்பு போன்ற அரசு துறைகளை சார்ந்தவர்களை தவிர மற்ற அரசு துறைகளில் பணியாற்றும் நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Exams Daily Mobile App Download
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் டிசம்பர் 12ம் தேதிக்குள் htpp://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in என்ற இணையத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.