செப். 20 ஆம் தேதி JNU நுழைவுத்தேர்வு – முன்பதிவு துவக்கம்!
தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு விண்ணப்பம் இன்று (ஜூலை 28) துவங்கியுள்ளது.
JNU நுழைவுத் தேர்வு:
இந்தியாவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இவ்வகை நுழைவுத்தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக தாமதமாகி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் செயல்பட்டு வரும் சிறப்புமிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
ICICI வங்கி சேவை கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் மாற்றம் – 10 முக்கிய தகவல்கள்!
டெல்லியில் தற்பொழுது கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று புதிய மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவுகள் இணையதளம் வழியாக இன்று (ஜூலை 28) முதல் துவங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) சேர விரும்பும் மாணவர்கள் பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ள jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்காக முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஜூலை 28) துவங்கும் இந்த முன்பதிவு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஆப்ஜெக்ட்டிவ் வினாக்கள் முறையில் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.