சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 8) புதன் கிழமை அன்று பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் காலை முதல் மதியம் வரை சில இடங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. எந்தெந்த இடங்களில் மின்வெட்டு என்ற முழு விவரமும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் சென்னை மாவட்ட புறநகர் பகுதிகளான தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு, நீலாங்கரை, மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் ஜூன் 8 புதன்கிழமை அன்று மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட இடங்களை சுற்றியுள்ள சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சாரவாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தாம்பரம் பகுதி:
பம்மல் மெயின் ரோடு, மசூரன் தெரு, பசும்பொன் நகர், ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாபா நகர், ஸ்ரீராம் நகர், கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோயில் தெரு, கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
போரூர் பகுதி :
காவனூர், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் மற்றும் அஞ்சுகம் நகர், திருமுடிவாக்கம், சிட்கோ நிறுவனத்தின் சில பகுதிகள், திருமுடிவாக்கம், மீனாட்சி நகர், சதீஷ் நகர், திருநீர்மலை மெயின் ரோடு, போலீஸ் குடியிருப்புகள், கோவூர், சீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தங்கம் நகர், ஜெயா நகர், காரம்பாக்கம் பிரதான சாலை, பூமாதேவி நகர், ரங்கா நகர், குன்றத்தூர் பிரதான சாலை, BHELL நகர், சத்தியநாராயணபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர் பகுதி :
கர்ரம் சுபேதார் தெரு, பள்ளப்பன் தெரு மற்றும் பெசன்ட் சாலையின் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி :
ஈக்காட்டுதாங்கல், ராஜ்பவன், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டிஜி நகர், புழுதிவாக்கம், முகலிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அடையாறு மற்றும் நீலாங்கரை பகுதி:
கற்பகவிநாயகர் நகர், நாராயணன் நகர், சௌந்தர்யா தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
கே.கே.நகர் பகுதி:
சூளைமேடு, ராஜேஸ்வரி தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், பஜனை கோயில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், வளசரவாக்கம், கணபதி நகர், ஆழ்வார்திருநகர், ராதா நகர், விருகம்பாக்கம், காந்தி சாலை, சாலிகிராமம், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதி, எம்ஜிஆர் நகர், காமராஜர் தெரு, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் பகுதி:
சரஸ்வதி நகர், காந்தி மெயின் ரோடு, ஒரகடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பொன்னேரி, துரைநல்லூர் பகுதி:
கவர்ப்பேட்டை, சோம்பட்டு, துறைநல்லூர், அவ்வூர், திருப்பலிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
சோத்துபெரும்பேடு பகுதி:
கெருதலாபுரம், அங்காடு, திருநெலை, அருமண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் என மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.