ஜூன் 4 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரைப் பகுதியில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
மின்தடை:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மின்சார துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா மின் விநியோகம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது, மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகளும் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
கடந்த ஒரு வருடமாக தவறாது துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்பே அறிவித்துவிடுவார். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (ஜூன் 4) திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் – யார் யாரெல்லாம் வாங்க முடியும் தெரியுமா?
பழனியை அடுத்த வாகரை பகுதியில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பனூத்து, புங்கமுத்தூர், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன் வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.