1 முதல் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!
புதுவையில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அடுத்த கல்வியாண்டு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளி திறப்பு
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் சரிவர இயங்கப்படவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் புதுவையிலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
அதன்படி தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அத்துடன் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு அதிக மனச்சுமையை ஏற்படுத்தியது. அதனால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இது தொடர்பான அறிவிப்பை உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தற்போது வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற ஜூன் 23ம் தேதி அன்று 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.