தமிழகத்தில் ஜூன். 16 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஜூன் 16ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை வாய்ப்பை தேடி வருபவர்கள் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூன்.16ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.இந்த முகாமானது டேனிஷ் மிஷன் நகர துவக்க பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
முல்லை குழந்தைக்கு வந்த ஆபத்து.. இனி நடக்க போவது என்ன? – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!
மேலும் முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ கல்வித்தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜூன்.12ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.