1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 பள்ளிகள் திறப்பு, மாநில அரசு அதிரடி முடிவு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 15 பள்ளிகள் திறப்பு, மாநில அரசு அதிரடி முடிவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 15 பள்ளிகள் திறப்பு, மாநில அரசு அதிரடி முடிவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 பள்ளிகள் திறப்பு, மாநில அரசு அதிரடி முடிவு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கி உள்ளது. இதனால் நான்காவது அலை உருவாகி அதிக பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு:

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தில் நிலவும் கொரோனா நான்காவது அலை அச்சத்திற்கு மத்தியில், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அடுத்த வாரம் முதல் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூன் 15ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்களின் எடையை ஏமாற்ற முடியாது!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்கள் முழுமையமாக பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால், இப்போது ஜூன் 15 முதல் 1 லிருந்து 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் தானாக முன்வந்து முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஏதேனும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் மும்பை மாநகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்சமாக 933 புதிய வழக்குகள் செயலில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்க் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை, ஆனால் நாங்கள் மாஸ்க் அணியுமாறு மக்களை வலியுறுத்துகிறோம். நோய்வாய்ப்படுவதற்கு பதிலாக, குடிமக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று டோப் ட்வீட் செய்திருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!