ஜூன் 13 (நாளை) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நாளை (ஜூன் 13) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் 11 மாவட்டங்களில் குறிப்பிட்ட காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் பலனாக பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள தொடங்கின. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 13) பள்ளிகள் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – கல்வித்துறையின் அறிவிப்பு சொல்வது என்ன?
தற்போது கர்நாடகாவில் விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி, சாமராஜநகரா, மைசூரு, மாண்டியா, ஹாசன், தார்வாட், ஹாவேரி, கடக் மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூன் 13, 2022 அன்று அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதாவது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அரசு உதவிபெறும், உதவிபெறாத, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிறவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாக்களிக்க அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
கொரோனா பரவல் மற்றும் சர்ச்சைக்குரிய ஹிஜாப் எதிர்ப்பு சம்பவங்கள் ஆகியவற்றின் காரணமாக கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த ஆண்டு நிறைய நாட்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவின் பேரில் மே 15 முதல் பள்ளிகள் முழுவீச்சில் மீண்டும் திறக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் நீண்ட நாட்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் ஆழமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.