தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற ஜூன் 13 முதல் 1-10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு மேற்கொள்ளும் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். மேலும் ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுத்துள்ளார்.

முன்னேற்பாடுகள் தீவிரம்:

கொரோனா காலகட்டமாகிய 2020 மற்றும் 2021ல் பல மாற்றங்கள் அமைந்ததில் பொருளாதாரமும் சரி! கல்வியும் சரி! இரண்டுமே அதிகளவு பாதித்தது. அதனால் அந்த சமயம் பள்ளிகள், அலுவலகங்கள் என ஏதும் செயல்படாமல் மாணவர்களும், பெற்றோர்களும் அவதிப்பட்டனர். நடப்பு ஆண்டு எல்லாம் பழைய நிலைக்கு மாறி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு, நல்ல முறையில் தேர்வுகளும் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டு, தற்போது அனைத்தும் முடிவுக்கு வரவுள்ள நிலையில் வருகிற ஜூன் 13 அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

ஜூன் 13ம் தேதி (நாளை) அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு – பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்கள் மூடல்!

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருவதால் பள்ளி திறப்பில் மாற்றம் இருக்குமா? என கேள்விகளை தொடர்ந்து பெற்றோர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அரசு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதாவது மாணவர்கள் முதல் நாள் வருகையின் போது பள்ளிகளில் தூய்மை பணிகளை முடித்து தயார்படுத்த வேண்டும் எனவும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை நடத்தி சரி செய்ய வேண்டும் எனவும், சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமான உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கும்பகோணத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவித்த தகவலில் எவ்வித மாற்றமும் இருக்காது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!