ITR கணக்கை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 கடைசி நாள் – வருமானத்துறை அறிவிப்பு!
ஐடிஆர் தாக்கல் (ஐடிஆர்) FY 2021-23 செய்வதற்கு ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாள் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது. மேலும், காலநீட்டிப்பு வழங்கும் எண்ணம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி:
வருமான வரியை செலுத்துபவர்கள் ஐடிஆர் தாக்கல் (ஐடிஆர்) FY 2021-23 செய்வதற்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். ஆனால், பலரும் தற்போது வரைக்குமே ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதாவது, தற்போதைக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும், தற்போதைய தரவுகளின்படி மொத்த வருமான வரிக் கணக்குகளின் எண்ணிக்கை 3.73 கோடியாக இருக்கிறது. இந்த வருமான வரிக் கணக்கு AY 2021-22 க்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் 44% குறைவாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும், தற்போது வரைக்கும் AY 2022–23 நிதியாண்டில் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் வருமான வரி மின்-தாக்கல் முறையின் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதுவே, 2021-22 நிதியாண்டுக்கான கணக்கை பார்க்கும் போது 2.3 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் வருமான வரி மின்-தாக்கல் முறையின் மூலமாக ஜூலை 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
பல சலுகைகளை அள்ளி தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ
இதனையடுத்து, கடந்த நிதியாண்டில் (2020-21) பலரும் ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் டிசம்பர் 31, 2021 வரைக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பின்னர் சுமார் 5.89 கோடி ஐடிஆர்கள் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இந்த முறையும் கண்டிப்பாக ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்வதற்கு காலநீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்வதற்கு காலநீட்டிப்பு வழங்கும் யோசனை இல்லை என வருவாய்த்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.