ஜூலை 29 சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் வரும் ஜூலை 29ம் தேதியான வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளை பற்றி மின்வாரியம் முன்னதாக அறிவித்து விடுகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தற்போது சென்னையின் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் ஜூலை 29ம் தேதியான வியாழக்கிழமை நடக்க இருக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ரூ.500, ரூ.1,000 – அரசு அதிர்ச்சி!
அதன்படி, கோவூர் பகுதியில், கோவூர், பெரியபணிச்சேரி, பரணிபுதூர், தண்டலம், மணஞ்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பாபு தோட்டம், ஆகாஷ் நகர், மணிகண்டன் நகர், மேத்தா நகர், ஒண்டி காலனி, குன்றத்தூர் ஒரு பகுதி. வேளச்சேரி மேற்கு பகுதி; காமராஜபுரம், கணபதி நகர், ராதா மோகன் தெரு, காந்தி குமாரன் தெரு, கண்ணகி தெரு. அடையார் பகுதி: தண்டீஸ்வரம் 8வது மற்றும் 9வது குறுக்கு தெரு, 3வது தண்டீஸ்வரம் மெயின் ரோடு முழுவதும். மயிலாப்பூர் பகுதியின் திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி நகர் 2வது தெரு, திருமூர்த்தி நகர் 4 வது தெரு.
TN Job “FB Group” Join Now
மேலும், மணலி பகுதி; பார்த்தசாரதி தெரு, அவரை கொல்லிமேடு, சேயாலாம் தெரு, பெரியசேக்காடு, பெருமாள் கோயில் தெரு, பச்சையப்பன் கார்டன். கே.கே நகர் பகுதியின் போஸ்டல் காலனி, 15வது செக்டார், அண்ணா குடியிருப்பு, கே.கே நகர், முனுசாமி சாலை, முகாம்பிகை தெரு, புலியூர் 2வது மெயின் ரோடு கோடம்பாக்கம், அவ்வை நகர் சூளைமேடு, கோவிந்தராஜ் தெரு, பாண்டியன் அவென்யூ சூளைமேடு, சுரேஷ் நகர், ஏ.வி.எம் காலனி, பாலாஜி நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் செய்யப்படும்.