ஜூலை 26 TNUSRB 2ம் நிலை காவலர் உடல் தகுதித்தேர்வு – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!
TNUSRB 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு வரும் ஜூலை 26ம் தேதி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
காவலர் உடல் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு அமல் – பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
அதனால் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழு இரண்டாம் கட்ட தேர்வான உடல் தகுதித்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் படி வரும் ஜூலை 26ம் தேதி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெறுமென மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதில் 2,204 ஆண்கள், 1,005 பெண்கள், 1 திருநங்கை பங்கேற்கவுள்ளனர். இந்த தேர்வில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடல் அளவுகளை அளத்தல், கயிறு ஏறுதல், ஓட்டம் போன்ற சோதனைகள் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறுவதற்கான பணிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழு செய்து வருகிறது. இந்த தேர்வு வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பரவி வருவதால் தேர்வர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும், அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.