தமிழகத்தில் ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மதுரை அழகர் கோவில் பகுதி மற்றும் விருதுநகரில் உள்ள வலையப்பட்டி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் ஜூலை 22 ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள் :
தமிழகத்தில் மின்வரிய ஊழியர்கள் மூலம் மாதந்தோறும் மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் மின் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் அனைத்து பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் நடைபெறும். அதன் படி ஜூலை 22 ம் தேதி மதுரையில் அழகர்கோவில், கிடாரிபட்டி, சாம்பிராணி பட்டி, பொய்க்கரைப்பட்டி, கள்ளந்திரி, அலகாபுரி, கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
CBSE 10, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் தேர்வு – கல்வி வாரியம் தகவல்!
அதனை தொடர்ந்து விருதுநகரில் உள்ள வலையப்பட்டி , பூவாணி, புதுப்பட்டி, மூவறைவென்றான், பிள்ளையார்நத்தம், குன்னூர், சொக்கப்பட்டி, லட்சுமியாபுரம், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, கிருஷ்ணன் கோவில், சத்திரப்பட்டி, காஞ்சரப்பேட்டை ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி வரை மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல் விருதுநகரில் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள கீழான் மறைநாடு, ஆலங்குளம், கங்கர் செவல், முத்துசாமி புறம், உப்புப்பட்டி, கொங்கன்குளம், எதிர்கோட்டை, கல்லம நாயக்கர்பட்டி, நரிகுளம், அருணாச்சலபுரம், காக்கிவடான்பட்டி, சிவலிங்கபுரம், செல்லம்பட்டி கோட்டைப்பட்டி, ராமன் பட்டி, நதிக்குடி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 22 ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.