ஜூலை 17 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை (17.07.25021) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வந்தது. கடந்த 9 மாதங்களில் அதிமுக அரசு எவ்வித மின் பராமரிப்பு பண்டிகையும் மேற்கொள்ளவில்லை அதனால் தற்போது பணிகள் மாவட்டம் தோறும் உள்ள மின் நிலையங்களில் மின் ஊழியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் விளக்கமளித்தார். இந்த நிலையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – இலங்கை அரசு அறிவிப்பு!
அதன் காரணமாக நாளை (17.07.25021) திண்டுக்கல் மாவட்டத்தில், விராலிபட்டி, செட்டிநாயக்கன் பட்டி, குரும்பபட்டி , திண்டுக்கல் நகர் ஆகிய பகுதிகளில் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அச்சங்குளம், வயல்சேரி, சல்பனோடை, ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து மரநாடு, பிரமனூர், நெடுங்குளம், மீனாட்சிபுரம், மாங்குடி, பூவந்தி, செங்குளம், மேல வெள்ளூர், மடப்புரம், லாடனேந்தல், பாப்பாங்குளம், தட்டான்குளம், மணலூர், நெடுங்குளம், காஞ்சிரங்குளம், அல்லிநகரம், வெள்ளக்கரை, பழையனூர், சத்தியாநகர், குருந்தங்குளம், கழுகேர்கர்க்கடை ஆகிய பகுதிகளில் திருபுவனம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (17.07.25021) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.