நடப்பு நிகழ்வுகள் ஜூலை 16 2018
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
முக்கியமான நாட்கள்
ஜூலை 16 – உலக பாம்பு தினம்
- உலகத்தில் பாம்புகள் பற்றிய மக்களின் அச்சங்களையும், பிரமைகளையும் நீக்கவே ஜூலை 16 ம் தேதி உலக பாம்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
தேசிய செய்திகள்
புது தில்லி
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research – ICAR) 90 வது ஆண்டு விழா
- இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்.) விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு, 90 வது ஆண்டு விழாவில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து விருதுகளையும் வழங்கினார்.
அனைத்து குழந்தை பராமரிப்பு நிறுவனங்களும் CARA விடம் பதிவு மற்றும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்
- அனைத்து குழந்தை பராமரிப்பு நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்திடம் (CARA) இணைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரம்
மஹாஜென்கோ (MAHAGENCO) பைப் கன்வேயர் சிஸ்டம் திறப்பு விழா
- ரயில்வே, நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (WCL) சுரங்கங்களில் இருந்து நிலக்கரித் துறைக்கு நிலக்கரி போக்குவரத்துக்காக மஹாஜென்கோ (MAHAGENCO) பைப் கன்வேயர் சிஸ்டத்தைத் திறந்துவைத்தார்.
சர்வதேச செய்திகள்
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் ஐஸ்லாந்து இடம்பிடித்தது
- ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் ஐஸ்லாந்தை உலகின் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் கவுன்சில் இருக்கைக்கு ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.
பங்களாதேஷில் இந்தியா தனது மிகப்பெரிய விசா மையத்தை திறந்தது
- விண்ணப்பதாரர்களுக்கான காத்திருக்கும் நேரத்தை குறைக்க இந்தியா தனது மிகப்பெரிய விசா மையத்தை வங்காளதேச தலைநகரான டாக்காவில் தொடங்கியது.
வணிகம் & பொருளாதாரம்
சாப்பேர் சில்லறை நிறுவனத்தை போன் பே வாங்குகிறது
- பிளிப்கார்ட்டின் டிஜிட்டல் செலுத்துதல் தொடக்கம் போன் பே ஆனது சாப்பேர் சில்லறை நிறுவனத்தை வாங்கியது.
மாநாடுகள்
நியூ இந்தியா கூட்டமைப்பு
- பிரதமர் திரு.நரேந்திர மோடி புது தில்லியில் Y4D நியூ இந்தியா கூட்டமைப்பில் உரையாற்றினார்.
ஆயுஷ் தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு
- ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் அனைத்து இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட் (AIIA), இந்தியா சர்வதேச மையம், புதுடில்லியில் ஜூலை 17, 18ஆம் தேதிகளில் ஆயுஷ் தேசிய நிறுவனங்களின் தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு நடக்கிறது.
மஸ்கட்கில் 8-வது இந்திய-ஓமன் கூட்டு ஆணைக் கூட்டம்
- இந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின் (JCM) 8 வது அமர்வு கூட்டத்தில், வர்த்தக, கைத்தொழில் மற்றும் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டுத் தலைமை தாங்கினார்.
திட்டங்கள்
சாகர்மாலா திட்டம்
- கடல்சார் மற்றும் கப்பல் கட்டுதலில்(CEMS) சிறப்பான மையம், கடல்வழி மற்றும் கப்பல் கட்டுப்பாட்டு துறை திறன் அபிவிருத்தியில் நன்கு நிதியளிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் விசாகப்பட்டினத்தில் அதன் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்சியாளர்களுக்கு தொடக்க நோக்குநிலை திட்டங்களை விளக்கத்தயாராக உள்ளன என்று அறிவித்துள்ளது.
“ஆங்கிலம் எனக்கு பயம் இல்லை” திட்டம்
- ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான “ஆங்கிலம் எனக்கு பயம் இல்லை” திட்டத்தை ஹரியானா தொடங்குகியது. மாணவர்கள் 1-ம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேசவும் அவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களின் திறனை வளர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியா பிபிஓ ஊக்குவிப்பு திட்டம்
- மத்திய அரசின் இந்தியா பிபிஓ ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ விரைவில் மைசூரில் தனது பிபிஓ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது .
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாக்பூரில் எம்.ஆர்.டி.எஸ்ஸிற்காக மஹமெட்ரோவுடன் ஒப்பந்தம்
- நாக்பூரில் மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டத்தை (MRTS) அறிமுகப்படுத்த Mahametro உடன் இந்திய இரயில்வே ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
பாதுகாப்பு செய்திகள்
பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
- பலசோர் ஒரிசாவில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் (ஐ.டி.ஆர்) இருந்து சூப்பர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நைஜீரிய கடற்படைத் தளபதியின் தலைவர் இந்திய வருகை
- வைஸ் அட்மிரல் ஐபக்-எட்டே ஏக்வெ இபஸ், நைஜீரிய கடற்படைத் தளபதி, நைஜீரிய கடற்படைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும் 2018 ஆம் ஆண்டு 16 முதல் 19 ஜூலை வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள்.
மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்
CIC செயலி
- புதிதாக மேம்படுத்தப்பட்ட CIC இருமொழி மொபைல் செயலி பதிப்பை மத்திய தகவல் ஆணையம் (CIC) அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
2018 FIFA உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் வென்றது
- 2018 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் 4-1 என்ற கணக்கில் குரோஷியாவை வென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது.
சஹாஜ் க்ரோவர் SA ஓபன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்
- முன்னால் சாம்பியன் சஹாஜ் க்ரோவர் தென்னாப்பிரிக்கா ஓபன் செஸ் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.