நடப்பு நிகழ்வுகள் ஜூலை 14,15 2018
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
முக்கியமான நாட்கள்
ஜூலை 14 – பிரஞ்சு தேசிய நாள்
- பிரான்ஸ் நாட்டில் Bastille day என்பது அந்நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் நாள் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. 1790ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஸ்டில் சிறையுடைப்பு நிகழ்வானது பிரெஞ்சு தேசத்தின் ஓர் எழுச்சியாக கருதப்பட்டது. பிரான்சுடன் வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார இணைப்புகளை பகிர்ந்து கொண்டிருக்கும் பாண்டிச்சேரி கரையோர நகரத்தில் கொண்டாடப்பட்டது.
தேசிய செய்திகள்
புது தில்லி
தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியாவின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள்
- இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டெண்ட்டின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
- அடுத்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தாளியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை இந்தியா வரவேற்கிறது.
குஜராத்
அகமதாபாத்தில் ஜகன்நாத் ரத யாத்ரா தொடங்குகிறது
- ஜகன்நாதரின் 141 வது ரத யாத்திரை அகமதாபாத்தில் இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.
அரியானா
ஷிரோமணி கபீர் பிரகாத் திவாஸ்
- இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஹரியானாவிலுள்ள ஃபதேஹாபாத்தில் உள்ள ஷிரோமணி கபிர் பிரகாத் திவாஸ் (கபீர் ஜெயந்தி) சென்று மரியாதை செலுத்தி, உரையாற்றினார்.
கேரளம்
சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச மருந்துகளை வழங்க கண்ணூர் பஞ்சாயத்து திட்டம்
- சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு இலவச மருந்துகளை வழங்குவதற்கான மருந்தகம் ஒன்றை தொடங்குவதற்கு மாவட்ட பஞ்சாயத்து திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரம்
ஆகஸ்ட் 1 முதல் திரைப்பட திரையரங்குகளில் வெளியுணவுப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி
- மகாராஷ்டிரா உணவு மற்றும் சிவில் சப்ளை மந்திரி ரவீந்திர சவான்,ஆகஸ்ட் 1 முதல் வெளி உணவு பொருட்கள் மல்டிப்லெக்ஸினுள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஒடிசா
ஒடிசாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்க பாரம்பரிய அமைச்சரவை
- ஒடிசாவின் வரலாறும் கலாச்சாரமும் பாதுகாக்க மாநில அரசு, முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பாரம்பரிய அமைச்சரவையை அமைத்தது.
தமிழ்நாடு
சென்னையில் கிராம உணவு விழா நடக்கிறது
- ‘உழவர், உணவு மற்றும் உணர்வுக்கான கிராம டிக்கெட்’, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சமையல்காரர்கள் பங்கேற்று 300 க்கும் அதிகமான உணவு வகைகளை தயாரிப்பார்கள்.
உத்திரப்பிரதேசம்
வாரணாசியில் பல அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டல்
- வாரணாசி நகர எரிவாயு விநியோக திட்டம், வாரணாசி-பால்லியா மெமு ரயில், பாஞ்ச்கோசி பரிக்ரமா மார்க், வாரணாசியில் ஒரு சர்வதேச மாநாட்டு மையம், மிர்சாபூர் மற்றும் வாரணாசி பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் , ஆசாம்கரில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே, ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும் நமாமி கங்கே ஆகியவற்றின் கீழ் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பன்சாகர் கால்வாய் திட்டம்
- உ.பி மாநிலம் மிர்சாபூரில் ரூ. 3 ஆயிரத்து 420 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களின் கூட்டு திட்டமான பன்சாகர் கால்வாயை பிரதமர் மோடி நாட்டுக்கு அற்பணித்து வைத்தார். மத்திய அரசு புதிதாக அறிவித்த மிர்சாபூர் மருத்துவ கல்லூரி திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
சர்வதேச செய்திகள்
ஐ.நா. பாதுகாப்பு சபை தெற்கு சூடானில் ஆயுதத் தடை விதிக்கிறது
- நாட்டில் அழிவுகரமான உள்நாட்டுப் போரை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு சபை தெற்கு சூடானில் ஆயுதத் தடை விதித்தது.
உலக சுங்க அமைப்பு (WCO)
- 2018 ஜூலை முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு உலக சுங்க அமைப்பின் (WCO) ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் துணை தலைவர் (பிராந்திய தலைவர்) ஆனது இந்தியா.
அறிவியல் செய்திகள்
காயத்திற்கு பட்டு அடிப்படையிலான பயோஆக்டிவ் மருந்துக்கட்டு மற்றும் தோல் ஒட்டுறுப்பு
- கௌஹாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள், காயத்திற்கு பட்டு அடிப்படையிலான பயோஆக்டிவ் மருந்துக்கட்டு மற்றும் தோல் ஒட்டுறுப்பை பட்டுப்பூச்சி புரதத்திலிருந்து கண்டறிந்துள்ளனர்.
ஐ.ஐ.டி பாம்பே : ஸ்டெம் செல்கள் பெருக்கத்தில் ஒரு திருப்புமுனை
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மனித முழங்கால் மூலக்கூறு உயிரணுக்களை (HMSCs) பயன்படுத்துவதில் ஒரு முக்கிய தடையாக உள்ளது, இது இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பாம்பே ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
இந்தியா-பங்களாதேஷ் உள்துறை மந்திரி பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டம்
- மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்காவில் பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் ஆசாத்உஸ்ஸமான் கானுடன் உள்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
நியமனங்கள்
- ஸ்ரீ இன்ஜெதி ஸ்ரீனிவாஸ் (செயலர்) – குழுவின் தலைவர்
- கார்பரேட் விவகார அமைச்சகம் (MCA) கம்பனிகள் சட்டம் 2013ன் தண்டனை விதிகளை மறுபரிசீலனை செய்வதற்காக, 10 பேர் கொண்ட உறுப்பினர் குழுவை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அமைத்துள்ளது.
- மௌரிசியோ சர்ரி – செல்சியா புதிய மேலாளர் (கால்பந்து)
திட்டங்கள்
பாரத்மாலா திட்டம்
- பாரத்மாலா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் ரூ. 44 ஆயிரம் கோடி செலவில் 2,520 கி.மீ. சாலையிட திட்டமிடப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நேஷனல் போலிஸ் அகாடமி மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலிஸ் அகாடமி, ஹைதராபாத் மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி, சர்தா, ராஜஷாஹி இடையே பயிற்சி, மேலாண்மை, கல்வியாளர்கள் பயிற்சியாளர் பரிமாற்றம் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்
இந்திய ஹாஜி தகவல் அமைப்பு
- இந்திய ஹாஜி தகவல் அமைப்பு, ஒரு மொபைல் போன் செயலி, தங்குமிட விடுதியின் இருப்பிடத்தை அறியவும், எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் இந்திய ஹஜ் மிஷனை தொடர்பு கொள்ளவும் இது உதவும்.
விளையாட்டு செய்திகள்
10,000 ரன்ககளை கடந்தார் தோனி
- முன்னாள் இந்திய கேப்டன் M.S.தோனி லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் 10,000 ஒரு நாள் சர்வதேச மைல்கல் ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்கும் இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி
- லார்ட்ஸில் இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பிபா 2018
- பெல்ஜியம் இங்கிலாந்தை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடம் பெற்றது.
தாய்லாந்து ஓபன் உலக டூர் சூப்பர் 500 பேட்மின்டன் போட்டிகள்
- தாய்லாந்து ஓபன் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவிடம் பி.வி. சிந்து தோல்வி.
துப்பாக்கி சுடுதல் ஹோப்ஸின் 28 வது கூட்ட சர்வதேச போட்டி
- சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் துப்பாக்கி சுடுதல் ஹோப்ஸின் 28 வது கூட்ட சர்வதேச போட்டியில் மானு பேக்கர் மற்றும் அன்மோல் ஜெயின் ஆகியோர் கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்றனர்.
11விளையாட்டு மத்திய மண்டலம் தேசிய தரவரிசை அட்டவணை டென்னிஸ் போட்டிகள்
- மானவ் தாக்கர் தனது இரண்டாவது இரட்டை பட்டம் வென்றார். 11விளையாட்டு மத்திய மண்டலம் தேசிய தரவரிசை அட்டவணை டென்னிஸ் போட்டியில் இளைஞர் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் பட்டங்களை வென்றார்.
விம்பிள்டன் 2018
- நோவக் ஜோகோவிச் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி நான்காவது விம்பிள்டன் பட்டம் பெற்றார். ஏஞ்சலிக்யூ கெர்பர் செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.