தமிழகத்தில் வரும் ஜூலை 11 உள்ளூர் விடுமுறை – பள்ளிகள் & கல்லூரிகள் மூடல்!
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வரும் ஜூலை 11 அன்று தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
இந்தியாவின் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பெருக்கு திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருக்கு திருவிழா நடைபெறவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு நடைபெற இருக்கிறது. அதிலும் நெல்லையப்பர் கோவிலின் தேரோட்டத்தன்று தான் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
Exams Daily Mobile App Download
இதற்காக, பலரும் நெய் வைத்தியம், முடி காணிக்கை உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்களை செய்கின்றனர். அந்த வகையில் நெல்லையப்பர் கோவிலின் தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால்,பல ஊர்களில் இருந்தும் பத்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் நெல்லை மாவட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்புபவர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!
மேலும், ஜூலை 11 அன்று பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பின் அந்த மாணவர்களுக்கு கட்டாயமாக அதே தேதியில் எந்தவித மறுத்தாலும் இல்லாமல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.