தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்களப் பணியாளர்களே – அரசாணை வெளியீடு!
பத்திரிக்கை, ஊடகத்துறையினரும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இவர்கள் கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என் அரசு அறிவித்துள்ளது.
முன்களப் பணியாளர்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவுகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் முதல்வர் அவர்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். தற்போது தளர்வில்லா முழு ஊரடங்காக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்திலும் காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் போன்றோர் இரவு, பகல் பாராது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இவர்களை தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரும் முன்கள பணியாளர்கள் தான் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரபூர்வ ஆணையை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் தமிழக அரசு சார்பாக அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆணைப்படி பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில், இல்லாவிட்டாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
பத்திரிக்கை, ஊடகத்துறையில் பணியாற்றி வரும் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பணியாளர்கள் போன்றோர்க்கு செய்தி மற்றும் மக்கள் தொலை தொடர்பு இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர் அட்டை அல்லது பாஸ் வைத்திருப்பவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். முதல்வரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் அனைவரும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
24 மணி நேரமும் பணியாற்றும் அரசு சம்பளம் வழங்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு இந்த தகுதி இல்லை. தனியார் நடத்தும் செய்தி மற்றும் காட்சி ஊடகத்லினருக்கு அரசு நிவாரணம் வழங்கும். ஏன் தெரியுமா………?