சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – RCB அணியில் இணையும் ஹேசில்வுட்!
இந்த ஆண்டிற்கான IPL போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் சேருவதற்கு குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் கடந்த வாரம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணியில் இணையவில்லை. அந்த வகையில் பாப் டு பிலிஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் திருமணம் முடித்த பிறகு சமீபத்தில் தான் தனது அணியுடன் இணைந்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் சேருவதற்கு குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பென்சன் திட்டம் அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஹேசில்வுட் இன்னும் இரண்டு நாட்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இந்த IPL சீசனுக்கான போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு கட்டாய மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என்பதால் அவரது முதல் ஆட்டத்திற்கு இன்னும் ஒரு வாரம் எடுக்கும் என தெரிகிறது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு ஜோஷ் ஹேசில்வுட் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிறிய இடைவெளியை எடுத்திருந்தார். அந்த வகையில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு IPL போட்டிகளில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்க இருக்கும் நிலையில், ஹேசில்வுட் மட்டும் தனது தனிமைப்படுத்தலை முடித்து ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு பின்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் RCB அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐபிஎல்லில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய RCB அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.