மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இனி கூட்டு வங்கி கணக்கு கட்டாயமில்லை!

0
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - இனி கூட்டு வங்கி கணக்கு கட்டாயமில்லை!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - இனி கூட்டு வங்கி கணக்கு கட்டாயமில்லை!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இனி கூட்டு வங்கி கணக்கு கட்டாயமில்லை!

ஓய்வு பெறும் மத்திய அரசு பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் துணைவியர்கள் ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கி கணக்கு தொடங்க அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெறுபவர்களை தனி கணக்கு தொடங்க கட்டாயப்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்:

மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது . இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியது. மேலும் அரசு பணிகளின் பணிக்காலம் நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – EPFO வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

இந்த ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி உயர்வால் பயனடைவர். அதனை தொடர்ந்து ஓய்வூதியம் பெறும் நபர் இறந்தால் அவரின் வாழ்க்கை துணைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக கூட்டு வங்கி கணக்கு அவசியமாகும் ஓய்வூதிய நபருடன் வாழ்க்கை துணை கூட்டு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெறும் நபர் இறந்த பின் ஓய்வூதிய தொகையானது அவரின் வாழ்க்கை துணைக்கு கிடைக்கும். இந்த நடைமுறையில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகிறது. அதனால் ஓய்வூதிய பெறும் நபர் இறந்த பிறகு அவரின் வாழ்க்கை துணைக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்காமல் போகிறது.

தமிழகத்தில் நாளை (நவ.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்த நிலையில் மத்திய ஓய்வூதியத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது சில நேரங்களில் கூட்டு வங்கி கணக்கை தொடங்க முடியாமல் போகிறது. அதனால் கூட்டு வங்கி கணக்கு தொடங்க கட்டாயப்படுத்த கூடாது என்று ஓய்வூதியத் துறையிடம் வலியுறுத்தியதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெறுவோரை தனி கணக்கு தொடங்க கட்டாயப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!