பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் – அதிர்ச்சி தரும் காரணம்!
பிரபல நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் 2023 ஆம் ஆண்டில் இருந்து உலக அளவில் அதன் டால்க் (Talc) அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேபி பவுடர்:
குழந்தைகளுக்கான பவுடர், சோப் என பல்வேறு வித பொருட்களுக்கான தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மிகவும் பிரபலமானது. மறுபுறம் இதன் டால்க் அடிப்படையிலான பவுடர் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழ தொடங்கியது. மேலும் வட அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பவுடர் பல்வேறு உடல் உபாதைகள் தொடங்கி கேன்சர் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை அந்நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
தங்களது தயாரிப்புகளின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள், அதற்கான முடிவுகளையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் தாங்கள் விற்கும் பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தின் சான்றிதழையும் சமர்ப்பித்து உள்ளது. இருப்பினும் அடுக்கடுக்கான சர்ச்சைகள் காரணமாக அதன் விற்பனை சரிய தொடங்கியது. சர்வதேச மார்க்கெட்டில் அதன் தேவையும் குறைந்தது. இதனால் டால்க் அடிப்படையிலான பவுடர் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், எங்களின் தயாரிப்பின் பாதுகாப்பு குறித்து, எங்களது நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை. இது புற்றுநோயை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. மேலும் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்புக்கு மாறுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே சோள மாவினால் செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் பேபி பவுடர் பல நாடுகளில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.