சிறந்த வீரருக்கான ஐசிசி விருது 2021 – இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தேர்வு!
ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தற்போது தட்டி சென்றுள்ளார்.
சிறந்த வீரருக்கான ஐசிசி விருது 2021:
ஐசிசி கவுன்சிலின் மூலமாக ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாதங்களில் வீரர்களின் செயல்பாடுகளை கவனித்து அதற்கு ஏற்ப விருதிற்கான வீரர் தேர்வு செய்யப்படுகிறார்.
IPL Countdown 2021 : முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?!
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விருது போட்டி பட்டியலில் இந்தியாவின் பும்ராஹ், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட் இந்தமுறை விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்தியாவிற்கான எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என இழந்துள்ளது. ஆயினும் இங்கிலாந்து கேப்டனின் ஜோ ரூட் தனி ஒருவனாக போராடி இங்கிலாந்திற்காக ரன்கள் குவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!
இந்தியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக 3 சதம் விளாசி அமர்களப்படுத்தியுள்ளார். இத்தொடரில் அவர், 3 சதம் உட்பட 507 ரன்கள் அவர் விளாசியுள்ளார். இதன் மூலம் விருதுக்கு தகுதி பெற்ற இவர், டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 5வது இடத்தில இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி வாக்களிக்கும் குழுவில் உள்ள முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினி ரூட்டின் இந்த சாதனையை புகழ்ந்துள்ளார். பெண்களுக்கான கிரிக்கெட்டில் அயர்லாந்து அணியின் ஆல்-ரவுண்டர் எய்மியர் ரிச்சார்ட்சன் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.