தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் பணி நியமனம்:
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்கப்படும். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் மத்திய அரசு சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் – கலந்தாய்வு தேதி வெளியீடு!
இதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஆசிரியர் தகுதி சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அரசு நேற்று தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடி காலத்தை நீட்டிக்க வேண்டும், என்று கடந்த 10ம் தேதி கோரிக்கை விடுத்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது என்று கூறினார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80,000 பேருக்கு கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.