தமிழக அறநிலைத்துறை கோவில்களில் CA படித்தவர்களுக்கு பணி – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் அறநிலைத்துறை கீழ் உள்ள கோவில்களில் சிஏ படித்தவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில் பணிகள்:
தமிழகத்தில் இந்து சமய திருக்கோவில்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அறநிலைத்துறை ஆகும். இந்த துறை சார்பில் மாநில அளவில் ஒரு தலைமை செயலகம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வார இறுதி, இரவு முழு ஊரடங்கு உத்தரவு ரத்து – பஞ்சாப் அரசு அறிவிப்பு!
அதன் பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களையும் பக்தர்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வாழ்ந்து வரும் வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு அதே இடத்தில் அரசு விதிமுறைகளின் படி அவர்களை வாடகைதாரர்களாக மாற்றம் செய்து வாடகை வசூலிக்கப்படும். மேலும் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோவில்களை கண்காணிக்க சிஏ படித்தவர்களை அறநிலையத்துறையில் வேலைக்கு அமர்த்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் தற்போது அறநிலைத்துறையில் பணிபுரிந்து வரும் தணிக்கை ஆய்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில்களில் வரவு செலவு கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் இந்த திட்டம் மூலமாக அறநிலைத்துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.