இந்திய அஞ்சல்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

0
இந்திய அஞ்சல்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அஞ்சல்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அஞ்சல்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Staff Car டிரைவர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பிப்ரவரி 23ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்தார்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம், 3 வருட கால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் அனுபவம் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தொலைத் தொடர்புத்துறை வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு நிலை-2 என்ற ஊதிய அளவு வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பெற்று கொண்டு பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்துடன் வயது, சாதி, தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து மார்ச் 10ம் தேதிக்குள் மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, குட்ஸ் ஷெட் சாலைகள், கோயம்புத்தூர்- 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற www.indiapost.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!