TCS, Wipro நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளும் ஊழியர்களின் சம்பள உயர்வும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களிடம் உள்ள பணியிடங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதனால் பல்வேறு வகையான தொழில்கள் பாதிப்பு அடைந்தனர். மேலும் தனியார் நிறுவனங்களில் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாததால் பெரும்பாலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. ஆனலாலும் ஐடி நிறுவனங்கள் ஒரு சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தப்படியே பணி புரியும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது அனைத்து துறைகலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் ஐடி நிறுவனங்களின் சேவை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி ஊழியர்களின் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டை விட கொரோனா பரவல் தற்போது குறைந்து உள்ளதால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
அதன்படி டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்., காக்னிசண்ட், கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விப்ரோ நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 17,500 பேருக்கு வேலை கொடுத்துள்ளது. இதையடுத்து டிசிஎஸ் நிறுவனம் 10,000 பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் அடுத்த ஆண்டில் சுமார் 40000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் 85,000 பேருக்கு வேலை வழங்கியதுடன் அடுத்த ஆண்டில் 50,000 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது.