இந்து சமய அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்கவும்!
இந்து சமய அறநிலையத் துறையில் 13 காலிப் பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 தான் கடைசி தேதி என்பதால், அதற்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், காவலர், பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைகளில் மொத்தமாக 13 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு எழுத்தர் பணியிடங்களுக்கு மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சீட்டு விற்பனை எழுத்தர் பணிக்கு ஒரு காலியிடம் இருப்பதாகவும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டு விற்பனை எழுத்தர் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளதாகவும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இந்த காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.18,500 முதல் ரூ. 50,400 வரைக்கும் மாதச் சம்பளம் வழங்கப்படும். துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு மொத்தமாக மூன்று காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு பணியிடங்களுக்கு மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் இருக்கிறது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.30, 500 வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து காவலர் பணிக்கு மொத்தமாக மூன்று பணியிடமும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது. ரூ.6 ஆயிரம் வரைக்கும் மாதச் சம்பளம் வழங்க இருக்கிறது. மேலும், திருமஞ்சனம் பணியிடங்களுக்கு மொத்தமாக இரண்டு காலிப்பணியிடம் உள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் வேத பாடசாலையில் ஒரு ஆண்டு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.15,900 முதல்ரூ. 50,400 வரைக்கும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
உதவி யானைப்பாகன்பணியிடங்களுக்கு ஒரு காலிப் பணியிடமும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் மற்றும் யானை வளர்க்க பயிற்சி பெற்றவர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.11,600 முதல் 36,800 வரை வழங்கப்படுகிறது. நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர்கள் உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010 என்கிற முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 ஆம் தேதி தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.