தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இங்கே!

0
தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இங்கே!
தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இங்கே!
தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இங்கே!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் 10ம் வகுப்பு முதல் முதுநிலை முடித்தவர்கள் வரை பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள இந்து மதத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருச்சியில் உள்ள கோவிலில் மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள்! முழு விபரம் இதோ!

அதில் தட்டச்சர், கணினி இயக்குபவர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தலா 1 காலியிடமும், தூய்மை பணியாளர் பணிக்கு 10 காலியிடங்களும் உள்ளது. இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், கணினி பிரிவில் இளநிலைப்பட்டம், பொறியியல் துறையில் சிவில் பட்டம், தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும். தட்டச்சர் பணிக்கு இளநிலை, முதுநிலை தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள், 2021 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடி தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

பணிக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கோயில் அலுவலகத்தில் கிடைக்கிறது. அதனை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்,விண்ணப்பங்களை உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி – 620002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!