அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் வாரிசுக்கு பணி – மாநில அரசு திட்டம்!
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர் உயிரிழந்தால், கருணை அடிப்படையில் அவரது இரத்த உறவுகளுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணி:
தற்சமயம் இளைஞர்களிடையே அரசு வேலை குறித்த மோகமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசு வேலைகளில் சேர்வதற்கான போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறையாத மாத ஊதியம், பென்ஷன் திட்டம் என பல காரணங்கள் அரசு வேலை மீதான பார்வை அதிகரிக்க முக்கிய காரணம்.
‘பேருந்துகள் இயங்காது, மதிய உணவு இல்லை’ – புதுச்சேரியில் செப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு!
கொரோனா காலத்தில் களப்பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதில் சில அரசு அதிகாரிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொரோனா காலத்தில் களப்பணியில் இறந்த அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகைகள் வகுப்பு சி மற்றும் டி ஊழியர்களுக்கு மட்டும் அமலில் உள்ளது. இதனால் பலர் நன்மை அடைந்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் கொரோனா காலத்தில் களப்பணியில் பி வகுப்பு அதிகாரிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து பணியில் இருக்கும் போது அரசு ஊழியர் உயிரிழந்தால், கருணை அடிப்படையில் அவரது இரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒப்புக்கொண்டு அமல்படுத்தி உள்ளார். இது அரசு அதிகாரிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.