ஓசூர் TATA எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 26 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – டிக்கெட் குறித்த விவரங்கள்!
அதாவது, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதாவது, 18 முதல் 20 வயதிற்குட்பட்ட 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களை பணியில் அமர்த்தவுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மூன்று மாதம் பயிற்சியுடன் மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் எனவும், உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதியுடன் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் ஓசூர் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டாயமாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்