TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.56000 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் tnpsc யில் குறைந்தது மாதந்தோறும் ரூ. 56 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதியே கடைசி நாள் என்று தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2, குரூப் 4 மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? ஹாப்பி நியூஸ் சொல்வாரா முதல்வர்!
மேலும் தற்போது டிஎன்பிஎஸ்சி புதிய அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30 ஆம் தேதியே கடைசி நாளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணி குறித்த விபரங்களாக, அதில் உள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 16 ஆகும். மேலும் சம்பளத் தொகையாக மாதந்தோறும் ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வாங்கலாம் என்றும், கல்வித் தகுதியாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சமூகவியல், சமூகப்பணி மற்றும் உளவியல் பிரிவுகளில் இளநிலை பட்டம் முடித்து இருக்க வேண்டும் என்றும் மேலும் சில விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வயது வரம்பாக எஸ்சி. எஸ் டி. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதை தாண்டி இருக்கக்கூடாது என்றும், பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 கொடுக்க வேண்டும் என்றும், மேலும் இதனை விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ 200 ஆன்லைனில் செலுத்த வேண்டும். மேலும் தேர்வு முறையாக எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.