தமிழகத்தில் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர்!
தமிழகத்தில் வீடு தேடி சென்று வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் பதவியேற்ற நாள் முதல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்சி பொறுப்பேற்று அதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் தொற்று பாதிப்பை குறைத்துள்ளார் . மேலும் அனைத்து துறை அமைச்சர்களுடனும் கலந்தாலோசனை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். கடந்த மாதம் ஒரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதலிடம் பிடித்திருந்தார்.
அஞ்சல் துறை காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 12ம் தேதி நேர்காணல்!
இந்த நல திட்டங்களின் ஒரு பகுதியாக வீடு தேடி வரும் மருத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களால் மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மையநாயக்கனூரில் மக்களை தேடி சென்று மருத்துவம் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
TN Job “FB Group” Join Now
அப்போது பேசிய அவர் வீடு தேடிச் சென்று மருத்துவம் வழங்கப்படுவது போல் வீடு தேடி சென்று வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் கூட்டுறவுத் துறையில் 4000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடரால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் மக்களிடம் வேலைவாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.