EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வேலை இழந்தோர் பணம் பெறும் வசதி!!
இபிஎஃப்ஓ அமைச்சகம் தங்களது பயனாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் புதிய அம்சமாக வேலை இழந்தோர் பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இபிஎஃப்ஓ:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் இறுதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் இபிஎஃப்ஓ பயனர்கள் பயன்பெறும் வகையில் தங்களது வைப்பு நிதியில் இருந்து முன்பணமாக மூன்று மாத ஊதியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இபிஎஃப்ஓ அறிவித்தது.
70 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் – ஜெரோதா சிஇஓ அறிவிப்பு!!
மேலும் இந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து மக்களை தாக்கி வருகிறது. இதனால் கடந்த ஆண்டை போல் தற்போதும் இபிஎஃப்ஓ பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து அதிகபட்சமாக 75 சதவிகித பணத்தை முன்பனாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனால் இபிஎஃப்ஓ பயனர்கள் நிம்மதி அடைந்தனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது இபிஎஃப்ஓ அமைச்சகம் மேலும் ஓர் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் அவர்களின் கணக்கு முடிக்காமல் உள்ளதால் ஓய்வூதியத்துக்கான தகுதியும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இபிஎஃப்ஓ பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.