வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – பிப். 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பிப்ரவரி 4ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த முகாமில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மக்கள் முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து பிப். 4ம் தேதி (சனிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் இணைந்து நடத்தவுள்ளது. முகாம் பிப். 4ம் தேதி சீர்காழியில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெறும்.
சென்னையில் ஜனவரி 30 முதல் போக்குவரத்து மாற்றம் – நிர்வாகம் அறிவிப்பு!
இந்த முகாமில் 8ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, முடித்தவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.