சிவகங்கையில் நாளை (நவ.14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டது. அதன் காரணமாக பலர் தங்களது வேலையே இழந்ததால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் நிறுவனங்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக மேலெழுந்து வருகிறது.
H1-B விசாதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் | தானியங்கி பணி நீட்டிப்பு! இந்தியர்கள் மகிழ்ச்சி!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கல்வித்தகுதி, முன் அனுபவம் முதலியவற்றின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!
நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் இளைஞர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்பத் தகுதி, முன் அனுபவம், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.