TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்லஸ் பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் பொறியியல் அல்லாத பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அதன் டிசிஎஸ் அட்லஸ் பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் பொறியியல் அல்லாத பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது குறித்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி, இந்த திட்டம் ‘புதுமைக்கான ஆர்வத்துடன் ஈர்க்கக்கூடிய திறமையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரவு மைய அணுகுமுறை மூலம் வணிக செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று நம்புபவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தகுதி:
M.Sc (கணிதம்/புள்ளியியல்/பொருளாதாரம்) அல்லது MA (பொருளாதாரம்) முடித்த விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை:
- முதலில் TCS NextStep போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தை பதிவு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து இணையதளத்தில் தனிப்பட்ட மற்றும் கல்வி சார்ந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், உங்கள் விண்ணப்பத்தின் நிலை ‘விண்ணப்பம் பெறப்பட்டது’ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் CT/DT ஐடியை பெறுவீர்கள்.
- உங்களிடம் ஏற்கனவே CT/DT ஐடி இருந்தால், உங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய TCS NextStep போர்ட்டலில் நேரடியாக உள்நுழையலாம்.
- இன்னும் TCS NextStep போர்ட்டலில் ஒரு கணக்கை உருவாக்கவில்லை என்றால், ‘இப்போது பதிவு செய்யுங்கள்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதில் ‘IT’ வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
- இப்போது, கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இறுதியாக TCSன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- இது ஒரு கட்டாய நடவடிக்கை என்று டிசிஎஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் ஒரு முறை மட்டுமே தங்களது விண்ணப்பங்களை செலுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.