IND vs ENG 3வது டெஸ்ட் : இந்தியாவுடன் மோதப்போவதில்லை, பாடம் கற்றுக் கொண்டோம் – ஜோ ரூட்!
இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற உள்ள 3 ஆவது டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடனான வார்த்தை மோதலுக்கு இடமில்லை என்றும் கடந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டி அளித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்
பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இரண்டு அணிகளுக்கு இடையே மைதானத்துக்குள் பல மோதல்கள் சம்பவிப்பது இயல்பு என்றாலும், மைதானத்துக்கு வரும் பார்வையாளர்களான ரசிகர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதிலும் வெளிநாடுகளில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு மற்ற நாட்டினரின் கேலி, கிண்டல்கள் என்பது பெறும் சவாலாகவே இருக்கிறது.
அனைத்து கடைகளிலும் ‘இது’ அவசியம், இல்லாவிட்டால் அபராதம் – மாநகராட்சி நிர்வாகம்!
இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 25) ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 ஆவது டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் தேவையற்ற வார்த்தை மோதல்களில் ஈடுபட போவதில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2 டெஸ்ட் ஆட்டங்களை தவற விட்ட இங்கிலாந்து அணி, இனி மைதானத்துக்குள் தேவையற்ற சண்டைகளை தவிர்த்து, விளையாட்டில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளது.
இது குறித்து ஜோ ரூட் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டை சுற்றி எப்போதும் நாடகங்கள், கேலிகள் இடம்பெறுவது உண்டு. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விளையாட்டை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டுமோ அப்படி செயல்பட விரும்புகிறோம். அதனால் ஆட்டங்களில் கவன சிதறல் உருவாகும் பகுதியை கண்டறிந்து, அத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட இனி விரும்பவில்லை. இப்போது ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
TN Job “FB Group” Join Now
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எப்படி வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளட்டும். கடந்த டெஸ்டின் போது மைதானத்தில் ஏற்பட்ட வார்த்தை மோதல்களில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டோம். அந்த போட்டியில் வேறு விதமாக சிந்தித்து செயல்பட்டிருக்கலாம்’ என கூறியுள்ளார். லார்ட்ஸ் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களிடம் நடந்து கொண்ட விதம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.