சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – ரூ.9,000/- உதவித்தொகை!
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தற்போதுல் சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Cum Data Entry Operator பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 09.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சமூக பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சமூக பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Assistant Cum Data Entry Operator கல்வி தகுதி:
- Assistant Cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு மற்றும் Computer பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் தட்டச்சு செய்வதில் முதுநிலை (Higher) சான்றிதழ் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
Assistant Cum Data Entry Operator வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Assistant Cum Data Entry Operator உதவித்தொகை:
Assistant Cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.9,000/- மாத உதவித் தொகையாக கொடுக்கப்படும்.
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
சமூக பாதுகாப்பு துறை விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 09.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும் .
தபால் செய்ய வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
778/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637 001.