ஜியோ (Jio) பயனர்களுக்கு செம அறிவிப்பு – ரூ.98 திட்டம் மீண்டும் அறிமுகம்!
கடந்த ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.98 பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி 14 நாட்களாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிரீபெயிட் சலுகைகள்:
அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் செய்யப்படுவதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஊரடங்கு காரணத்தால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு நாள் ஒன்றுக்கு அதிக அளவு டேட்டா தேவைப்படுகிறது. இதனால் மொபைல் நெட் ஒர்க் நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு அதிக சலுகைககளை வழங்கி வருகின்றனர்.
மதுக்கடைகள் தினசரி 3 மணிநேரம் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்துகின்றனர். இந்திய டெலிகாம் சந்தையில் குறுகிய ஆண்டுகளில் அதீத வளர்ச்சியை சந்தித்துள்ள ஜியோ நிறுவனம், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரூ.98 பிரீபெயிட் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரக்கூடிய 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை புதிய வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து நெட்வொர்க்குகளின் திட்டத்தை விட மிக குறைந்த விலை திட்டமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 98 பிரீபெயிட் சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி பாதியாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் பயன்பெறுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜியோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.