JioPhone பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி – அதிரடி கட்டண உயர்வு!

0
JioPhone பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி - அதிரடி கட்டண உயர்வு!
JioPhone பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி - அதிரடி கட்டண உயர்வு!
JioPhone பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி – அதிரடி கட்டண உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ தனது வருடாந்திர ஜியோபோன் திட்டத்திற்கு முன்பு ரூ. 749 ஆக கட்டணம் நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது ரூ.150 விலை உயர்த்தி ரூ. 899 ஆக கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்திற்கு 336 நாட்கள் வேலிடிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டண உயர்வு:

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்தது. இருப்பினும், டெலிகாம் ஆபரேட்டர் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது. ஜியோ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஜியோ திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டமாகும், மேலும் உயர்வுக்குப் பிறகு இப்போது கட்டணம் ரூ.899 ஆக உள்ளது. மேலும், ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை விரைவில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ள ஒரு ஆண்டிற்கான ப்ரீ பெய்டு திட்டத்தின் முந்தைய விலை ரூ.749 ஆக இருந்தது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்ற நன்மைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. JioPhone பயனர்களுக்கான இந்த ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 24GB டேட்டாவை வழங்குகிறது, மேலும், பயனர்கள் 28 நாட்களுக்கு 2GB அதிவேக டேட்டாவை பெறுகிறார்கள், அதன்பின் வேகம் 64 Kbps ஆக குறைகிறது. பயனர்கள் 12 மாத சுழற்சியில் டேட்டாவை பெறுகிறார்கள். கூடுதலாக, இது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 50 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. இந்த திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும். மற்ற திட்டங்களைப் போலவே, பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் அணுகலைப் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்தத் திட்டத்தைத் தவிர, வேறு எந்தத் திட்டத்தின் விலையையும் ஜியோ இப்போது மாற்றவில்லை. மேலும், லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள ஸ்பாங்மிக் கிராமத்தில் 4G மொபைல் இணைப்பை வழங்கும் முதல் ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ மாறியுள்ளது. இப்பகுதியில் உள்ள பயனர்கள் இப்போது 4G குரல் மற்றும் டேட்டா சேவைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். தொலைத்தொடர்பு நிறுவனம் தனது 4ஜி சேவைகளை கேதார்நாத் மலையேற்ற பாதைக்கு விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அவ்வாறு செய்யும் முதல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!