Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – 2 நாட்களுக்கு இலவச சேவை!
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இடையூறு ஏற்பட்டது. அதனால் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய திட்டத்துடன் கூடுதல் சேவைகளை வழங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்க்காலம்.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனங்கள் தங்களது ரிச்சார்ஜ் திட்டத்தில் விலை உயர்வை அமல்படுத்தியது. இதில் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெய்டு திட்டத்தில் விலை உயர்வை கடந்த டிசம்பர் மாதத்தில் அமல்படுத்தியது. அதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அதிருப்தியை அடைந்தனர். ஆனாலும் தற்போது 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இடையூறு ஏற்பட்டது. அத்துடன் நெட்வொர்க் குறைபாடு காரணமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இணைய சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சுமார் எட்டு மணி நேரத்திற்கு நீடித்தது. அதனால் ஜியோவின் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இவ்வாறு இடையூறு ஏற்பட்டதால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது.
இலவச கேஸ் சிலிண்டர், பேருந்து பயணம் & இருசக்கர வாகனம் – பாஜகவின் சூப்பர் தேர்தல் அறிக்கை!
இந்த அறிவிப்பில், 8 மணி நேரமாக இடையூறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வரம்பற்ற திட்டத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய திட்டத்துடன் இணைக்கப்பட்டுவிடும். அத்துடன் நெட்வொர்க் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜியோ நிறுவனம் குறுந்தகவல் அனுப்பியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாகவே 2 நாட்களுக்கு இணைய சேவை நீட்டிக்கப்படும். இதே போல் கடந்த ஆண்டும் நெட்வொர்க் குறைபாடு காரணமாக இலவச சேவையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.