ஜியோவின் Double Diwali Offer – நீங்கள் கொடுத்த பணம் முழுவதும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்!
இந்தியாவில் செயல்படும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் ஆனது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பரான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி குறித்து விரிவாக கீழே பார்ப்போம்.
தீபாவளி ஆபர்:
தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனமானது ஒரு சூப்பரான தள்ளுபடியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் நாட்டில் 5ஜி சேவையானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர் 4ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தன் வசம் கவருவதற்கு வசதியாக ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முழு பணத்தையும் திருப்பி கொடுக்கும் ‘ஃபுல் மணி பேக் ஆபர்’ என்ற சிறப்பு ஆபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆஃபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் வழங்கப்படுகிறது. புதிய பிராட்பேண்ட் சேவைக்கு நீங்கள் செலவு செய்த பணம் முழுவதும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை – மீறினால் சிறை தண்டனை! அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதாவது நீங்கள் செலவு செய்த தொகையானது Voucher-ஆக திரும்ப கிடைக்கும். அதன்படி ஜியோ ஃபைபர் பெற ரூ.599 திட்டத்தை தேர்வு செய்தால் 6 மாத காலத்திற்கு ரூ.4,241 செலுத்த வேண்டும். இதே போல் ரூ.899 திட்டத்தை தேர்வு செய்தால் 6 மாதம் வரை ரூ.6,365 செலுத்த வேண்டும். இதில் நீங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.599 திட்டத்தை தேர்வு செய்யும் போது ரூ.4,500 மதிப்புள்ள பலன்களும் இதே போல் ரூ.899 திட்டத்தை தேர்வு செய்யும் போது ரூ.6,500 மதிப்புள்ள பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த திட்டங்களுடன் உங்களுக்கு ஜியோஃபைபர் செட்-டாப் பாக்ஸும் கிடைக்கிறது. இந்த சிறப்பு சலுகையானது அக்டோபர் 28 வரை மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.