ஜியோ (Jio) 1 ரூபாய் கட்டணத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள் இதோ!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை அளிக்கும் நோக்கத்தில் தற்போது புதிதாக ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளத்து. அதில் ரூ.1 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் 100 MB டேட்டா பெற்றுக் கொள்ளலாம்.
ரீசார்ஜ் திட்டம்:
ஜியோ ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமானது நாட்டில் உள்ளதிலேயே மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக உள்ளது. அதன்படி ரூ. 1 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் 100 MB டேட்டாவை பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அதிக அளவிலான டேட்டா தேவைப்படாதவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரீசார்ஜ் திட்டம் MyJio செயலியில் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் இணையத்தில் இல்லை.
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கருணை மதிப்பெண்கள் கிடையாது!
ஜியோ நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டங்களில் ஆரம்ப விலையில் உள்ள ரூ. 119 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை விட இது மிகவும் மலிவாக உள்ளது. ஆரம்பத்தில் TelecomTalk அறிவித்தபடி, ஜியோவிற்கான ரூ.1 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 100 எம்பி டேட்டாவுடன் வருகிறது. பயனர்கள் அதன் மொத்த டேட்டா அளவையும் பயன்படுத்தியவுடன், அவர்கள் 64Kbps வேகத்தில் இணைய வசதியை பெற முடியும். ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டத்தை MyJio செயலியில் உள்ள மற்ற திட்டங்களின் கீழ் உள்ளது. இந்த திட்டத்தை 10 முறை பயன்படுத்தினால், பயனர்களுக்கு கிட்டத்தட்ட 1 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் மறைவு!
இதன் மூலம் 1 ஜிபி டேட்டாவை மாதம் ரூ.15 இல் பெற்றுக் கொள்ளலாம். ஜியோவைத் தவிர, நாட்டில் உள்ள வேறு எந்த தொலை தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கவில்லை. தங்களுக்குத் தேவையானதை விட அதிக டேட்டாவை வாங்க விரும்பாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்ததாக உள்ள போதிலும், இந்த திட்டத்தில் எத்தனை பயனர்கள் ரீசார்ஜ் செய்ய முடியும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் அனைத்து நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறைந்த விலை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பது போல் உள்ளது.