இந்தியாவில் Jio 5G சேவைகள் ஆகஸ்ட் 15 முதல் துவக்கம்? ஆகாஷ் அம்பானி விளக்கம்!
அதிவேகத்தில் இணையத்தள சேவை உள்ளிட்டவற்றை வழங்கும் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நாளுக்காக செல்போன் வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவரான ஆகாஷ் அம்பானி, ஸ்பெக்ட்ரம் ஏல செயல்முறை முடிந்த பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிறுவனம் 5G சேவையை நாட்டில் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Jio 5G சேவை:
நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் இன்டர்நெட் சேவை, கட்டாய தேவையாக மாறி வருகிறது. அதாவது கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கத்தால் பல நிறுவனங்கள் முடங்கின, அந்த சமயத்தில் ஏராளமான நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி உத்தரவிட்டனர். அப்போது ஊழியர்களின் வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது இன்டர்நெட் தான். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக தான் கல்வி பயின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் 2ஜி,3ஜி,4ஜி யைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அடியெடுத்து வைக்கிறது. இணைய சேவையின் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி என வரவிருக்கும் உலகத்துக்கு தேவையான வேகம் அளிக்க 5ஜி தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது. இதில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதிக ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC தேர்வாணையத்தில் 1087 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு
மேலும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்ட நாளன்று ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ‘நாடு முழுவதும் 5ஜியை வெளியிடுவதன் மூலம் ஆசாதியின் அமிர்த மஹோத்சவை கொண்டாடுவோம். ஜியோ, உலகத்தரம் வாய்ந்த மலிவு விலையில் 5ஜி மற்றும் 5ஜி சேவையை நாட்டில் வழங்க உறுதிபூண்டுள்ளது. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகாஷ் அம்பானியின் இந்த அறிக்கை இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் தொடங்குவதை சுட்டிக்காட்டுகிறது.