JIO பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 5G சேவை அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி நெட் ஒர்க் நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வருகிறது. தற்போது, தமிழகத்தில் மட்டும் 8 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது.
5G சேவை:
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக 5ஜி இணைய சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். இந்த 5ஜி பயன்பாட்டின் மூலம் 1GBPS வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும்.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை தொடங்கியது. 2023ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து நகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகர்கோவில், கும்பகோணம், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களிலும் ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது ஜியோ பயனர்களுக்கு Jio True 5G – யை பயன்படுத்த Jio 5G Welcome Offer வழங்கப்படுகிறது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் வரும் 2024 மார்ச் மாத இறுதிக்குள் இந்தியா முழுவதும் உண்மையான 5G சேவையை வழங்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.