9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

0
9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இன்று (ஆகஸ்ட் 2) முதல் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று (ஆகஸ்ட் 2) முதல் அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னாக மீண்டும் துவங்கியுள்ளது.

22 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

எனினும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதன் படி மாநில அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின் கீழ் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக வகுப்பறைகளின் இருக்கை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் பள்ளி வளாகத்தில் இருக்கும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர ஜார்க்கண்ட் மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் கீழ், பெற்றோர்கள் அனுமதியுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்காக மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பயிற்சி மையங்கள் மீண்டும் திறக்கப்படலாம்.

இருப்பினும் தடுப்பூசி போட்ட பின்னரே மாணவர்கள் பயிற்சி மையங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதுகலை கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள நுழைவு வாயில்களிலும் மாணவர்கள் மட்டும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!