மே 4 முதல் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் மே 4ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, வாரிய தேர்வுகள் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டது.
பொதுத்தேர்வுகள் அறிவிப்பு:
ஜார்கண்ட் கல்வி கவுன்சில் மே 4 முதல் மே 21 வரை வகுப்புகள் 10 மற்றும் 12 பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 9:45 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரையிலும் நடைபெறும். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நடைமுறை தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 27 வரை நடைபெறும். நடைமுறைத் தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளால் விடைத்தாள்கள் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு – மார்ச் 15 முதல் தொடக்கம்!!
அனைத்து பள்ளிகளும் நடைமுறைத் தேர்வின் முடிவை ஏப்ரல் 30க்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா தொற்றுநோயால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, முன்னர் பாடத்திட்டங்களை 40 சதவீதம் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் போர்டு தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்