பிற்பகல் 2 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு ஆனது ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தினசரி காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
ஜார்கண்ட் மாநில அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ள நிலையில், பயணத்திற்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டங்களுக்கு இடையிலான இயக்கத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில் கொண்டு, அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 10 வரை நீட்டித்தது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – விரைவில் அறிவிப்பு!!
ஏப்ரல் 22 அன்று முதல் அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள முழு ஊரடங்கின் தளர்வுகளின் ஒரு பகுதியாக, இப்போது 15 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை பதிவு செய்துள்ள ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், ஹசாரிபாக் மற்றும் தன்பாத் உள்ளிட்ட மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களில், உடைகள், நகைகள் மற்றும் காலணிகள் தவிர வேறு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகி உள்ளது. மேலும் புதிதாக 831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 4,991 ஆகவும், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,37,774 ஆகவும் உள்ளது.