ஜூலை 1 வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கருத்தில் கொண்டு ஜார்க்கண்ட் மாநில அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்வுகள் இன்றி ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த மாநில அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இருப்பினும் நாட்டின் சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தற்போது பரவுவதாக மத்திய அரசு எச்சரித்து உள்ளது. இந்த திரிபு வைரஸ் 3ம் அலைக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து கொண்டே வருகின்றன.
தமிழக ரேசன் கடைகளில் ₹2000 & 14 வகை மளிகை பொருட்கள் – ஜூன் 25க்குள் வழங்க உத்தரவு!
தற்போது ஜார்க்கண்ட் மாநில அரசு ஏற்கனவே ஜூன் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு உத்தரவினை தற்போது ஜூலை 1 வரை கூடுதல் தளர்வுகள் இன்றி நீட்டித்து உள்ளது. இதில் கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. COVID-19 மூன்றாவது அலையை மனதில் வைத்து, ஜார்க்கண்ட் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஏப்ரல் 22 ஆம் தேதி மாநிலத்தில் முதன்முதலில் ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது 7வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி!
‘மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதால், ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முடிவு எடுத்துள்ளோம்’ என்று முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் இல்லாமல் தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ஜூன் 15ம் தேதி, மாநில அரசு ஊரடங்கை ஜூன் 24 வரை நீட்டித்தது, ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகள் மாலை 4 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை வெளியீடு!
இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் பேருந்துகளைத் தவிர மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை உள்ளது. தனியார் வாகனங்களில் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு இ-பாஸ்கள் கட்டாயமாக இருக்கும், ஆனால் மாவட்டத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Do not give messages