முழு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 22 முதல் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, ஜார்க்கண்ட் அரசு மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கானது ஏப்ரல் 22 காலை 6 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 29 மாலை 6 மணி வரை தொடரும். மேலும் அத்தியாவசிய சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்த நிலையில் இருக்கும். இருப்பினும், பக்தர்கள் வருகைக்கு அனுமதிக்கப்படாது. இது தவிர சுரங்க, விவசாய மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் பரிமாற்ற சங்கிலியை உடைப்பதற்காக ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் அலுவலகங்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட சில அலுவலகங்களைத் தவிர அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். கடந்த 24 மணி நேரத்தில், ஜார்க்கண்டில் 3,992 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. மேலும் இறப்பு எண்ணிக்கை 1,456 ஆக உயர்ந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்